Sunday, 9 August 2020

சகேயு


#சகேயு#

அதிகாரத்தில் தலைவன்
ஆஸ்தியில் செல்வன்
உள்ளத்தில் பாவி
உருவத்தில் குள்ளன்...

ஊரார்  சொன்னதை
காதில் கேட்டு 
இன்னார் இயேசு
என்று தன் 
கண்ணால் காண...  

வித விதமாய்
வகை தேடி
வாய்க்காமல் போகவே...

ஆனாலும் விடவில்லை
தான் கொண்ட 
ஆசை தனை...

அத்தி
மர கிளையினிலே
அமர்ந்து கொண்டு
அவருக்காய் காத்திருந்தான்
அவரையே கண் 
நோக்கி பார்த்திருந்தான்...

அத்தி மரத்தடியில் நின்று அண்ணார்ந்து பார்த்து
கொண்டு ஆசையாய்
அழைத்திடவே அவசரமாய்
இறங்கி வந்தான்
அன்போடு அழைத்து
சென்று தன் 
வீட்டில் தங்கிடவே...

பார்த்தாயா பார்த்தாயா
பாவியோடு பந்தி
சேர பரபரப்பாய்
போனார் என்று
அக்கம் பக்கம்
முணுமுணுக்க...

அந்தஸ்தயையும்
ஆஸ்தியையும்
அவருக்காய் தூக்கி
 போட்டு...

அநியாயமாய் வாங்கியதை அப்பொழுதே திருப்பி 
தந்து அவர்
பாதம் வந்து 
நிக்க...

இன்றைக்கே உன்
வீட்டில் இரட்சிப்பு
வந்தது  என்று 
விசுவாசிகளின்
பட்டியலில் இவனும்
ஒருவன் என்றார்..

உலகத்தையே உன்
வசம் ஆக்கி
உன் ஜீவனை
இழந்து வீட்டு
இருளிலே வாழ்வோரேல்லாம்...

இறைமகன் இயேசுவை
தன் வீட்டில் கூட்டி
சேர்த்தால் இழந்ததை
திரும்பப் பெருவாய்
இரட்சிப்பின் பாத்திரமாய்..

லூக்கா19:1 -10

கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா..

No comments:

Post a Comment

வசனம்