Monday, 13 July 2020

பயப்படாதிருங்கள்



தேவனின் வார்த்தை

பயப்படாதிருங்கள்


கிறுஸ்துவுக்குள் பிரியமானவர்களே,


 இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பட்ட நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும  அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளிலும் கூட தேவனுடையை வார்த்தையை தியானிக்க கொடுத்த மேலான கிருபைக்காக தேவனை துதிக்கிறேன்.தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

      

 'பயப்டாதிருங்கள்'  என்ற வார்தையின் அடிப்படையில்,வேதத்தில் உள்ள  சம்பவங்களின் பின்னணியில் தேவன் நமக்கு சொல்லும் செய்தியை தியானிக்க போகிறோம். இந்த சம்பவம் ஆதியாகமம் 14 வது அதிகாரத்தை முழுவதும் வாசிக்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

        ஆபிராம் தன்னுடைய சகோதரன் மகன்  லோத்துவுக்கு ஏற்பட்ட தீமையின் நிமித்தமான போராட்டத்தில் தேவன் ஆபிராமோடே இருந்து  லோத்துவையும் அவனுடைய பொருள்களையும் திரும்ப கொண்டு வரப்பண்ணி ஆபிராமே நீ பயப்டாதே எந்த சூழ்நிலையிலும் நீ இருந்தாலும் நான் உனக்கு கேடகமாக இருக்கிறேன் என்றும்,நான் உனக்கு பலனாய் இருக்கிறேன் என்று  ஆசீர்வாதத்தை தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்தார் என்று ஆதியாகமம்15:1ல் வாசிக்கிறோம்.

இந்தக் காரியங்கள் நடந்தபின்புகர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். (ஆதியாகமம் 15:1)

நாமும் கூட இந்நாட்களில் கலக்கங்கள், போரட்டங்கள், நெருக்கங்கள், கண்ணீர்கள், பாடுகள், வேதனைகள், துன்பங்கள், துயரங்கள், வியாதிகள், தனிமைகள், மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் நாளையதினம் நமக்கு விடியுமா என்ற நிலையுலும் இருக்கலாம். இன்றும்  இயேசு கிறுஸ்து நம்மையும் பார்த்து சொல்லுகிறார் பயப்படாதிருங்கள். நான் உங்களுக்கு கேடகமாக இருக்கிறேன். நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம் அப்படி  என்ன செய்தார் ஆபிராம்? ஆபிராகமுக்கு  தேவன் எப்படி? இப்படிபட்ட ஆசீர்வாத்தை கொடுக்க முடிந்தது.அதற்கு அப்படி என்னதான் செய்தார் என்ற யோசிப்போம்..

   கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. (ஆதியாகமம் 12:1)

     அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதியாகமம் 22:2)

மேலே வாசித்த இரண்டு சம்பவங்கள்  ஆபிரகாமின் வாழ்க்கையிலே மிகவும் முக்கியமான சம்பவங்கள். ஒருவேளை இதே போல தேவன் நம்மிடத்தில் கேட்டிருந்தால் கீழ்படிந்திருப்போமா? அநேக நேரங்களில் கண்ணுக்கு தெரிந்த மனிதர்கலேயே நம்ப மறுக்கிறோம். இப்படிபட்ட சந்தேகம் மற்ற கீழ்படிதல் இருக்கிறதா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இப்படி தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன எல்லவாற்றையும் கேள்வி கேட்கமால் கீழ்படிந்தார். அதுமட்டுமல்ல அவர் தேவனை தன்னுடைய உண்மையான தேவன் என்றும், அவரேயே நம்பி எதையும் செய்ய தயாராக இருந்தார், அவரை தன் உள்ளத்தில் ஆழத்தில் பற்றுதலுடன் வைத்திருந்தார்,அதனால் தான் அவர் அவ்வாறு கீழ்படிய முடிந்தது,ஆசீர்வத்தை சுதந்தரித்துக் கொள்ள முடிந்தது.அது மட்டுமில்லாமல் ஆபிராம் தேவனுக்கு பயந்து தீமையை விட்டு விலகினார் என்றும் வேதத்தில் பல இடங்களில் வாசிக்கலாம்.எனவே தான் தேவன் ஆபிராமோடே இருந்தார். 

 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.(நீதிமொழிகள் 28:13)

  நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவான் 1:9)

 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;  (நீதிமொழிகள் 8:13)


ஆம் அன்புக்கூரியவர்களே நாமும் தீமையை வீட்டு விலகி, நம்முடைய பாவங்களின் நிமித்தம் நம் உள்ளத்தில் மரித்த  இயேசு கிறுஸ்துவை, நம்முடைய   பாவத்தை அறிக்கை செய்து,  மனம்திருந்தி அவரையே சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுது, அடக்கம் செய்யப்பட்ட கல்லரையில் அல்ல உயிருள்ள உங்கள் இயேசு கிறுஸ்து  நம்முடைய உள்ளத்திலே உயிர்தெழுவார். நாமும்,இப்படப்பட்ட அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால், ஆசீர்வதத்தை பெற்றுக்கொள்ளுவோம் என்பது அதிக நிச்சயம்.ஆமேன்.

                                                                                                        கிறுஸ்துவின் பணியில்
                                                                                                           டேவிட சாமுவேல்ராஜா...


No comments:

Post a Comment

வசனம்